Publish Date: Thu, 01 Apr 2021 (10:44 IST)
Updated Date: Thu, 01 Apr 2021 (10:46 IST)
இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் அசாம், மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் மோதல்கள் இருந்து வருவதால் பல்வேறு கட்டங்களாக அதிகமான பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன