Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

Prasanth Karthick
புதன், 14 மே 2025 (08:55 IST)

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க மத்திய, மாநில அரசுகள் ஏசி இலவசமாக தருவதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதிய வேளைகளில் பல வீடுகளில் மக்கள் உள்ளே இருந்தாலுமே புழுக்கத்தில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

 

இந்நிலையில் கோடை வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக ஏசி வழங்குவதாகவௌம், அதனை மாநில அரசின் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு தகவல் குறுஞ்செய்தியாக ஆங்காங்கே பரவி வருகிறது.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

34 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகுமா? என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

ரஃபேல் விமானம் தாக்கியதாக வரும் செய்தி கட்டுக்கதை: இந்திய ராணுவம் விளக்கம்..!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அதிருப்தி..!

நான் தான் போரை நிறுத்தினேன்.. மீண்டும் அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments