Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் வருமான வரி சோதனை: திமுகவினர் தாக்கியதாக 4 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (15:24 IST)
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்த போது திமுகவினர் தாக்கியதாக நான்கு வருமானத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று காலை முதல் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நான்கு வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
திமுகவினர் தாக்கியதாக வருமானவரித்துறை பெண் அதிகாரி காயத்ரி உள்பட நான்கு அதிகாரிகள் அரசு மருத்துவமனை இதில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments