Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (14:09 IST)
நாடாளுமன்றத்தை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் நிலையில் இந்த கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிட கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும் கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இது போன்ற பொதுநல வழக்குகளை விசாரிப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்தால் எதிர்காலத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments