Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒற்றைத்தலைமையில் உறுதியாக இருக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?

Advertiesment
edappadi
, வியாழன், 16 ஜூன் 2022 (21:50 IST)
இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டால் அது ஜெயலலிதா அம்மாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார் 
 
மேலும் ஒற்றை தலைமைக்கு இப்போது அவசியம் இல்லை என்றும் நானும் எடப்பாடி பழனிச்சாமியும் இது குறித்து பேசவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார் 
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையில் உறுதியாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்துள்ள இந்த நேரத்தில் ஒற்றை தலைமையை பிடிக்க விட்டால் அதன் பிறகு எப்போது பிடிக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து சேலத்தில் அவர் ரகசிய ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற நிலையிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி பின் வாங்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சமோசா'' விற்கும் பிரபல டிவி தொகுப்பாளர்...மக்கள் அதிர்ச்சி