Publish Date: Mon, 15 Nov 2021 (11:06 IST)
Updated Date: Mon, 15 Nov 2021 (11:09 IST)
முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் சரோஜா!
முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டுமென நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த மனுவை தற்போது அவர் வாபஸ் பெற்று உள்ளதாக அறிவித்துள்ளார்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை அவர் இன்று திரும்பப் பெற்றார்
முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதால் நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது