Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் கைது.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (15:48 IST)
மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை திருமங்கலம் - கொல்லம் சாலையில் நான்கு வழி சாலை பணிகள் காரணமாக விபத்துக்கள் அதிகம் நடப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் விபத்துக்களை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து   கொண்ட நிலையில் திடீரென சாலை மறியல் செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை சரி செய்ய முயன்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இருப்பினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து சாலை மறியல் செய்த ஆர்பி உதயகுமார் மற்றும் அவருடன் இருந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று போராடிய நிலையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments