Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திடீரென விலகிய சைபர் கிரைம் டி.எஸ்.பி..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (15:44 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்து வந்த சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே ரவி என்பவர் திடீரென சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திமுக அனுதாபியான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து சென்னை ஐகோர்ட் பல உத்தரவுகளை பிறப்பித்தது என்பதும் இதையடுத்து சென்னை அண்ணாநகர் துணை ஆணையர், ஆவடி துணை ஆணையர் மற்றும் சேலம் துணை ஆணையர் கொண்ட உள்பட சிலர் கொண்ட குழு  அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் சைபர் க்ரைம் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி இடம்பெற்று இருந்த நிலையில் தற்போது அவர் இந்த குழுவில் இருந்து திடீரென விலகி உள்ளார். தன்னை சரியாக பணி செய்ய விடாமல் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நடந்து கொள்வதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. டிஎஸ்பி யின் இந்த விலகல் முடிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்