Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்கழி பிரதோஷம் மற்றும் பெளர்ணமி.. சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

Advertiesment
sathuragiri

Siva

, திங்கள், 6 ஜனவரி 2025 (08:36 IST)
மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் மார்கழி மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி உண்டு. என்றும் இரவு நேரத்தில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிக்க கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரி பாடல்.. டிஸ்கவரி புக் பேலஸ் விளக்கம்..!