Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர் கைது

Webdunia
வியாழன், 17 மே 2018 (08:40 IST)
பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் மற்றும் பாம்பை கொண்டு வந்த பாம்பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடலூரில் ஒருவரது சதாபிகேஷம் விழா ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்தால் விசேஷமாக இருக்கும் என்று சிலர் ஆலோசனை கூறியதை அடுத்து பாம்பாட்டி மூலம் பாம்பை கொண்டு வந்து புரோகிதர் பூஜை செய்தார்
 
இந்த பூஜையை அதில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகள் பூஜையில் ஈடுபட்ட புரோகிதர் மற்றும் பாம்பாட்டி ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments