Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எடியூரப்பாவாக இருந்தால்...ப.சிதம்பரம்

Webdunia
வியாழன், 17 மே 2018 (08:04 IST)
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமல் வந்துள்ள நிலையில் தனிப்பெரும் கட்சியான 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் நேற்று அழைப்பு விடுத்தார். 
 
கவர்னரின் இந்த முடிவை அடுத்து நேற்றிரவே உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் இன்று மதியம் 2-00 மணிக்குள் ஆதரவு எம்எல்ஏக்கள் யார் யார் என்று கொடுக்க எடியூரப்பா கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கின் விசாரணையை  வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது 
 
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து கூறியபோது, 'நான் எடியூரப்பாவாக இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவியேற்க மாட்டேன்' என்று கூறியுள்ளார். ஆனால் எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments