Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா பாதிப்பு: கால்நடைகளுக்கு உடனடியாக தீவனம் தர உத்தரவு

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (15:51 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் வழங்க தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். மீளா துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்த பேரழிவில் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மீதமுள்ள கால்நடைகளும் உண்ண உணவின்றி தவித்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதிமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
 
இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments