Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூக்களை வாங்க ஆள் இல்லை – விவசாயிகள் என்ன செய்கிறார்கள் பாருங்கள் !

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (17:09 IST)
திண்டுக்கல் மாவட்ட பூ விவசாயிகள் பூக்களைப் பறித்து மாடுகளுக்கு உணவாக வைக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  உலக அளவில் கொரோனாவால், 11.30 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். 2.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகில் இதுவரை 60,107பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2902  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியதால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயமும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விளைந்து விற்பனைக்குத் தயாரான நிலையில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் பூக்களைப் பயிரிட்டு இருந்த விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பூ வியாபாரிகள் பூக்கள் பூத்து நிற்கும் நிலையில் அவற்றைப் பறித்து மாடுகளுக்கு தீவனமாக வைக்கின்றனர். இதனால் நாள்தோறும் 100 டன்னுக்கு மேலாக சம்பங்கி பூக்கள் வீணாகிவருகிறது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments