Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

Siva
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (07:24 IST)
இன்று  பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக பண்டிகை மற்றும் விழா நாட்களில் கோயம்பேட்டில் காய்கறி, பழம் மற்றும் மலர்களின் விலையில் ஏற்றம் காணப்படும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்படுவதால், பூக்களுக்கு தேவை அதிகரித்து, அதன் விலையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்தது.

சமீபத்தில் ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது அது ரூ.600க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஐஸ் மல்லிகை ரூ.200-இல் இருந்து ரூ.300க்கு, முல்லை ரூ.400-இல் இருந்து ரூ.750க்கு, ஜாதி மல்லி ரூ.450-இல் இருந்து ரூ.750க்கு உயர்ந்துள்ளன. மேலும், கனகாம்பரம் ரூ.500, சாமந்தி ரூ.180, சம்பங்கி ரூ.240, அரளிப்பூ ரூ.350, சாக்லேட் ரோஜா ரூ.160, பன்னீர் ரோஜா ரூ.120 என விற்பனை நடைபெற்று வருகிறது.

பண்டிகையையொட்டி விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தோஷமாக உள்ளனர். பங்குனி உத்திரம் முடிந்ததும், விலை மீண்டும் கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments