Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

Siva
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (07:18 IST)
சென்னையின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், இன்று காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்கள் அதிக வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை திடீரென சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு மழை பெய்ததாக தகவல்கள் உள்ளன.

ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில், அதாவது இன்று காலை 10 மணிக்குள், திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கக்கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும் என்றும் இன்று சில மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments