Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லிகை பூ விலை கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனை...!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (12:46 IST)
ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது., பெரும்பாலான மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும், பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்., அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை 1500 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், முல்லை 600 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,
 
இதே போன்று பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய அரளி 200 ரூபாய்க்கும், செண்டு பூ 70 ரூபாய்க்கும், கோழிக் கொண்டை 60 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,
 
பனிப்பொழிவு காரணமாக கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments