Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி ஆண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை அன்னதானம்

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (12:23 IST)
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில்,  ஸ்ரீ பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை  நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 
இப்பகுதியில், விவசாயம் செழிக்க வேண்டியும், புயல் வெள்ள கன மழை பாதிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் உலக நன்மைக்காகவும்  பழனி ஆண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
 
கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பூஜை பொருட்களும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை, பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஆலய நிர்வாகி ஏ .எல். சீனிவாசன் சுவாமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments