Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன்கள் ஏற்றி சென்ற வேன் விபத்து.. சாலையில் கொட்டிய மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்..!

Siva
வியாழன், 6 பிப்ரவரி 2025 (12:57 IST)
வேலூர் அருகே மீன்கள் ஏற்றி சென்ற வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து, சாலையில் கொட்டிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், இரண்டு டன் கடல் மீன்களை தனது வேனில் ஏற்றி வேலூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அகரம் சேரி என்ற பகுதியில், வேன் சென்று கொண்டிருக்கும்போது திடீரென டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக, வேனில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் கொட்டின. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பைகளிலும் பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி, சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்த சம்பவத்தால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments