Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை கனமழை வெள்ளம்… மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறை!

சென்னை கனமழை வெள்ளம்… மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறை!
, திங்கள், 8 நவம்பர் 2021 (09:38 IST)
சென்னையில் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கியுள்ள பொது மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை இறங்கியுள்ளது. இதுவரை 107 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாவட்டங்களில் 272 ஏரிகள் நிரம்பின… கனமழை எதிரொலி!