Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து விபத்து!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:51 IST)
சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை போரூர் அருகே இ-பைக்குகள் ஷோரூம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பைக் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து அந்த ஷோ ரூமில் இருந்த மற்ற இ-பைக்குகளுக்கும் தீ வேகமாக பரவியதை அடுத்து 17 இ-பைக்குகள் அடுத்டுத்து தீயில் எரிந்து நாசமாகின
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் அதன் 17 இ-பைக்குகளும் தீக்கிரையாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 ஏற்கனவே இ-பைக்குகள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆங்காங்கே தீப்பிடித்து விபத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள்  தீயில் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments