சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து விபத்து!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:51 IST)
சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை போரூர் அருகே இ-பைக்குகள் ஷோரூம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பைக் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து அந்த ஷோ ரூமில் இருந்த மற்ற இ-பைக்குகளுக்கும் தீ வேகமாக பரவியதை அடுத்து 17 இ-பைக்குகள் அடுத்டுத்து தீயில் எரிந்து நாசமாகின
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் அதன் 17 இ-பைக்குகளும் தீக்கிரையாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 ஏற்கனவே இ-பைக்குகள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆங்காங்கே தீப்பிடித்து விபத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள்  தீயில் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments