Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைக்கு கட்டணம்: திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (12:14 IST)
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது
 
இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்படுவதாவது:
 
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகின்ற 20.03.2024 க்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 
 
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என திருக்கோயில் இணை ஆணையர்/செயல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்.. திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்த திமுக எம்பிக்கள்..!

அமித்ஷா சொல்வதை நான் நம்புகிறேன்.. கூட்டணி ஆட்சி தான்: அடித்து சொல்லும் அண்ணாமலை..

அடுத்த கட்டுரையில்
Show comments