Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த அப்பா ! கல்லைப் போட்டு கொன்ற கொடூர மகன் !

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (12:54 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டாவரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் ஆவார். இவர் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். அதில்லாமல் அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அதனால் அவருக்கும் அப்பா சுந்தர் ராமுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி அது  கைக்கலப்பாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த விக்னேஷ், கீழே கிடந்த கல்லை எடுத்து சுந்தரராமனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சுந்தரராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments