Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாமனார் நெஞ்சுவலியால் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல் !

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (08:59 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் நேற்று தீபாவளியன்று மாரடைப்புக் காரணமாக காலமாகியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் காளியண்ணன். 80 வயதாகும் இவர் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையம் என்ற ஊரில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருந்த இவர்  நேற்று இவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக சொல்லியுள்ளார். உறவினர்கள் அவரை உடனடியாக அவரை அருகில் உள்ள குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சொல்லியுள்ளனர். இந்தத் தகவல்  சேலத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி சொல்லப்பட்டுள்ளது. உடனடியாக அவர் தன் மாமனார் வீட்டுக்கு சென்று இறுதி காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். காளியண்ணனின் மறைவுக்கு அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான ராமதாஸ், சரத்குமார் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments