Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணல் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி

மணல் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி
, செவ்வாய், 13 டிசம்பர் 2016 (18:01 IST)
மணல் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தையும் மகனும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுப்பட்டனர்.
 


 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதி மலையப்பநகரில் வசிப்பவர் நல்லதம்பி(52), இவருடைய மகன் கிருபாகரன்(22) இருவரும் வாரச்சந்தையில் கறுவாடு விற்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகத்தின் அருகே திருக்காம்புலியூர் சென்ற போது மணல் அள்ள சென்ற லாரி கட்டுப்பாட்டை இழுந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் விபத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகைப்படத்தில் முகம் தெரிந்ததால் பெண் கைது