Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை : சென்னை அருகே துயரம்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (17:38 IST)
சென்னை அருகே தனியார் கல்லூரி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிசாந்தி. சில வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் தெலுங்கு பாடப்பிரிவில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஹரிசாந்தி, அரசு தேர்வெழுதி பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியை ஆன பிறகும் கூட முன்னர் பணிபுரிந்த தனியார் கல்லூரிக்கு செல்வதையும், அங்குள்ள தனது நண்பர்களையும், மாணவர்களையும் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ஹரிசாந்தி. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல கல்லூரி நண்பர்களை காண சென்ற ஹரிசாந்தி தான் பாடம் நடத்திய வகுப்பறைக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை கல்லூரி தொடங்கும் சமயம் ஹரிசாந்தி தூக்கிட்டு இறந்திருப்பதை கண்ட துறைத்தலைவர் உடனடியாக கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments