Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை : சென்னை அருகே துயரம்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (17:38 IST)
சென்னை அருகே தனியார் கல்லூரி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிசாந்தி. சில வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் தெலுங்கு பாடப்பிரிவில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஹரிசாந்தி, அரசு தேர்வெழுதி பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியை ஆன பிறகும் கூட முன்னர் பணிபுரிந்த தனியார் கல்லூரிக்கு செல்வதையும், அங்குள்ள தனது நண்பர்களையும், மாணவர்களையும் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ஹரிசாந்தி. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல கல்லூரி நண்பர்களை காண சென்ற ஹரிசாந்தி தான் பாடம் நடத்திய வகுப்பறைக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை கல்லூரி தொடங்கும் சமயம் ஹரிசாந்தி தூக்கிட்டு இறந்திருப்பதை கண்ட துறைத்தலைவர் உடனடியாக கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments