Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மாசம் சும்மா கிடந்த பார்சல்: வெடிகுண்டுகளை கண்டு ரயில்வே ஷாக்!!

6 மாசம் சும்மா கிடந்த பார்சல்: வெடிகுண்டுகளை கண்டு ரயில்வே ஷாக்!!
, புதன், 18 டிசம்பர் 2019 (12:00 IST)
ரயில்வே குடோனில் 6 மாத காலமாக யாரும் உரிமை கோராத பார்சலில் வெடிகுண்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஏப்ரல் மாதம் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் நாக்பூரில் இருந்து சென்னை ரயில் நிலையத்திற்கு பார்சல் ஒன்று ராணுவம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சல் அக்டோபர் மாதம் வரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. 
 
பல மாதங்கள் கடந்து அந்த பார்சலை யாரும் உரிமை கோராததால் ரயில்வே நிர்வாகம் அதனை ரயில்வே குடோனுக்கு அனுப்பி வைத்தது. அங்கு பின்னர் அந்த பார்சலை ஏலத்தில் விட முடிவு செய்தனர். ஏலத்திற்கு முன்னர் அந்த பார்சலில் என்ன உள்ளது என சோதனை செய்துள்ளனர். 
 
அப்போது அதில் 10 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு ரயில்வே நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், 172 வது பட்டாலியனான அந்தமானுக்குப் பதில், 72வது பட்டாலியான சென்னைக்கு அந்த பார்சல் முகவரி மாறி வந்திருப்பதும் தெரியவந்தது. இந்த பார்சல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்ல தூக்கம் வேண்டுமா? எப்படி தயாராவது?