Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேசன் கடையில் நிவாரண பொருட்கள் பெற கூடுதல் அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு!

ரேசன் கடையில் நிவாரண பொருட்கள் பெற கூடுதல் அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு!
, ஞாயிறு, 25 ஜூலை 2021 (12:25 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை அடுத்து ஜூன் மூன்றாம் தேதி 14 வகை நிவாரண பொருட்களை ரேஷன் கடையில் வழங்கவிருப்பதாக அறிவித்திருந்தார் 
 
அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த நிவாரண பொருட்கள் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் வாங்கிவிட்டார்கள். இருப்பினும் ஒரு சிலரும் ஊரில் இல்லாததால் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்களுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஆகஸ்ட் 1 முதல் நிவாரண பொருட்களை இதுவரை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்களும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயக்குமார்தான் சார்பட்டா டான்சிங் ரோஸ்!? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்!