Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்த்தமில்லாமல் பேசுபவர் அமைச்சர் ஜெயக்குமார்! – டிகேஎஸ் இளங்கோசன் காட்டம்!

Webdunia
ஞாயிறு, 24 நவம்பர் 2019 (14:19 IST)
அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு ஆணவே பேச்சே தவிர அதில் அர்த்தமில்லை என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

2021 சட்டசபை தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் இருக்கும் சூழலில் தேர்தல் பரபரப்புகள் கட்சிகளிடையே இப்போதே வெளிப்பட தொடங்கியிருக்கின்றன. மேலும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக அரசின் திட்டங்களை ஒவ்வொரு முறை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கும் போதும் மற்ற அதிமுக அமைச்சர்களுக்கு முன்னாலேயே ஆஜராகி உடனடியாக பதிலடியாக ஏதாவது பேசுபவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். ஒவ்வொரு முறையும் ரைமிங்கில் ஏதாவது பதிலளித்து ட்ரெண்ட் ஆவார் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரின் இந்த பதில் சொல்லும் விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் ”அவர் அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் பேசுகிறாரே தவிர அர்த்தத்தோடு எதையும் அவர் பேசவில்லை. மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை பற்றியே இன்னமும் முழுமையாக தெரியாத அமைச்சர் தன்னை செயல் முதல்வராக நினைத்துக் கொண்டு யார் எந்த துறை பற்றி பேசினாலும் இவர் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments