Publish Date: Fri, 13 Sep 2019 (20:02 IST)
Updated Date: Fri, 13 Sep 2019 (20:10 IST)
ஈரோடு மினி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கள்ள காதல் ஜோடிகள் உல்லாசத்தில் ஈடுபடுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் கள்ள காதல் ஜோடிகள் பேருந்தில் இருக்கையில் அமர்ந்து அங்கும், இங்கும் நோட்டமிட்டு உல்லாசத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி வந்தன. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், ஈரோடு மினி பேருந்து நிலையத்துக்கு ஒரு வாலிபருடன் ஒரு இளம்பெண் வந்துள்ளார். இருவருமே போதையில் இருந்துள்ளனர்.
திடீரென இருவரும் பேருந்து நிலையத்தில் படுத்துக் கொண்டனர். அர்தன் பிறகு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவத்தை சில பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பல வருடங்களாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் ஆனால் இது சம்பந்தமாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் பேருந்து நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள நிலையிலும், இது போன்ற சம்பவ்வங்கள் போலீஸ் கண்டும் காணாமல் போல் போவதாக வெளியாகியுள்ள தகவல் காவல்துறையினரின் அலட்சியப்போக்கை வெளிப்படுத்துகிறது. இது சம்பந்தமாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Arun Prasath
Publish Date: Fri, 13 Sep 2019 (20:02 IST)
Updated Date: Fri, 13 Sep 2019 (20:10 IST)