Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு: இன்னும் முடிவெடுக்காத அதிமுக..!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:44 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி அதாவது நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் முடிகிறது. 
 
இந்த நிலையில் இன்னும் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இன்று டெல்லி செல்வதாகவும் தென்னரசு தான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளிக்க செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாளை அதிமுக வேட்பாளர் வேட்புமனு  தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தென்னரசு வேட்பாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தங்கள் தரப்பு வேட்பாளர் குறித்த பரிசீலனை செய்யப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டிலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட போவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments