ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (12:49 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நேற்றுடன் இந்த தொகுதிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பாளர் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிந்தது.

திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று வேட்புமான பரிசீலனை தொடங்கியது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டதாகவும், அவருக்குரிய சின்னம் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக வேட்பாளர் சந்திரகுமார்  வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகுதியில் போட்டியிடும் 15 க்கு மேற்பட்ட சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி தேதி என்ற நிலையில், அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments