Publish Date: Wed, 09 Feb 2022 (19:21 IST)
Updated Date: Wed, 09 Feb 2022 (19:23 IST)
சக்கரம் சுழலும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியதாவது:
திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் நியாயமாக நடக்க வேண்டும் என்றும் சக்கரம் சுழலும் என்பதை அதிகாரிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
siva
Publish Date: Wed, 09 Feb 2022 (19:21 IST)
Updated Date: Wed, 09 Feb 2022 (19:23 IST)