Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாநில அரசை கலைக்க சதி நடக்கின்றது: தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு!

Advertiesment
chandrasekara
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:50 IST)
4 மாநில அரசுகளை கலைக்க சதி நடப்பதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா, டில்லி, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று வீடியோ ஒன்றில் தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்
 
 இந்த வீடியோவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சிபிஐ, ஊடகங்கள், அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நாட்டையும் ஜனநாயகத்தையும் உச்சநீதிமன்றம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் தெலுங்கானா அரசு கவிழ்ந்து விடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் பேசியுள்ளதையும் தெலுங்கானா முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 மணி நேரம் திருப்பதி மூடல்… அன்னதானமும் ரத்து!