Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா வந்ததும் சத்தமில்லாமல் கிளம்பிய ஈபிஎஸ்!!

சசிகலா வந்ததும் சத்தமில்லாமல் கிளம்பிய ஈபிஎஸ்!!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (14:01 IST)
சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

 
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் மதுசூதனனை சந்திக்கு சசிக்கலா தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதற்கு சில நிமிடங்கள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி மதுசூதனனை சந்திக்க உள்ளே சென்றார். சசிக்கலா சிறையிலிருந்து வந்த பிறகு முதன்முறையாக இருவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆனால், மதுசூதனன் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்றார் என தகவலும் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்ரீத் நெருங்கும் நேரத்தில் பாக்தாத் குண்டுவெடிப்பு