இ-பாஸ் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகள்.. சோதனைச் சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (11:36 IST)
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில்  இ-பாஸ் நடைமுறையால் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதியான கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெளி மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த பலரும் இ-பாஸ் நடைமுறை தெரியாமல், நீலகிரிக்கு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். நெட்வர்க் பிரச்னை மற்றும் ஒரே நேரத்தில் பலர் இ-பாஸ் பெற முயற்சி செய்வதால் ஓடிபி வர தாமதமாகிறது. இ-பாஸ் பெறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் நிலை இருப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
அதேபோல கொடைக்கானல் பகுதியிலும் இ-பாஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பலர் வருகை தந்து இருப்பதாகவும் அவர்கள் ஆன்லைன் மூலம் இ-பாஸ் அப்ளை செய்து வருவதாகவும் இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ_பாஸ் நடைமுறை இல்லை என்பதால் சிலர் காரை திருப்பி அனுப்பி விட்டு பேருந்துகளில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments