Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

Mahendran
திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:16 IST)
தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மகன் மற்றும் சகோதர வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், அவரது வங்கி கணக்கில் அதிக பரிவர்த்தனை இருந்ததாக செய்திகள் வெளியாகியதையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னை அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, பெசன்ட் நகர், எம்.சி.ஆர். நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுபோல், அமைச்சர் கே. என். நேருவின் மகன் மற்றும் பெரம்பலூர் தொகுதி மக்களவை எம்பி அருண் அவர்களுக்கு சொந்தமான சில இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த இரண்டு சோதனைகள் முடிந்த பிறகு, சோதனையில் மீட்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments