Publish Date: Thu, 14 Mar 2024 (07:17 IST)
Updated Date: Thu, 14 Mar 2024 (07:27 IST)
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீரென சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை என்று துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக செந்தில் பாலாஜி உள்பட சில திமுக பிரமுகர்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் திடீர் என இன்று காலை சென்னையில் உள்ள 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாகவும் அவர்களின் பாதுகாப்புக்காக துணை இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஒரு முக்கிய தகவலின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடந்து வருவதாகவும் சோதனை செய்யப்படும் இடங்கள் மற்றும் சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மாலை தகவல் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.