Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. ஆவணங்கள் சிக்கியதா?

Mahendran
வெள்ளி, 7 மார்ச் 2025 (10:47 IST)
நேற்று சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்ட புகாரை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
 
மேலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது நண்பன் ஜெயமுருகன் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது.
 
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் ஒப்பந்ததாரர் அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதேபோல், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள மதுபான ஆலையிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அதிகாரிகள் விளக்கம் அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments