Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

Siva
வெள்ளி, 16 மே 2025 (08:40 IST)
சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வீடு உள்பட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் 1000 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
சென்னை மணப்பாக்ம் உள்பட 5  இடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த மார்ச் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்த நிலையில், அந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில், தற்போது மீண்டும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments