Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பவே ஹிட்லிஸ்டில் இருந்த பாலாஜி? என்கவுண்ட்டர் செய்தால்தான் ரவுடியிசம் குறையும்!- முன்னாள் டிஜிபி ரவி!

Prasanth Karthick
புதன், 18 செப்டம்பர் 2024 (11:16 IST)

சென்னையில் பிரபல ரவுடியாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து முன்னாள் டிஜிபி ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சென்னை பகுதியில் பிரபல ரவுடியாக இருந்து வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள நிலையில் விசாரணைக்காக போலீஸார் அவரை கைது செய்ய முயன்றபோது, போலீஸாரை அவர் தாக்கியதால் தற்காப்புக்காக என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

 

சமீபமாக தமிழ்நாட்டில் என்கவுண்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ALSO READ: புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?
 

இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் டிஜிபி ரவி “2006ல் நான் காவல் இணை ஆணையராக இருந்தபோதே காக்கா தோப்பு பாலாஜி எங்களுடைய ஹிட் லிஸ்ட்டில் இருந்தவர்தான். என்கவுண்ட்டர் செய்தால்தான் இதுபோன்ற ரவுடியிசம் குறையும். உத்தர பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு என்கவுண்ட்டர் சாதாரணமாக நடக்கிறது. இது ஒரு பெரிய விஷயம் இல்லை” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments