Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (08:34 IST)
பணியிட மாறுதல் வழங்கவில்லை என்ற ஆத்திரத்தில் மன்னார்குடியை சேர்ந்த தபால் ஊழியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த ஜோயல்ராஜ் என்பவர் மன்னார்குடி தலைமை தபால் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜோயல்ராஜ் தனக்கு சொந்த ஊருக்கே பணியிட மாறுதல் செய்துத் தருமாறு மேலாளரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரிடம் கேட்டு வந்துள்ளார்.
 
ஆனால் மேலாளர் ஜோயல்ராஜின் பணிமாறுதல் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோயல்ராஜ் குடிபோதையில் தபால் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார். சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கினார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜோயல்ராஜை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments