விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (21:04 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இதையடுத்து, நீதிபதி சக்திவேல் இந்த வழக்கை விசாரித்த போது, தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
 
 அம்பேத்கரின் வழியில் நடக்கும் தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி "யானை" சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அஸ்ஸாமைத் தவிர்ந்த மற்ற மாநிலங்களில் அந்த சின்னம்பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே உரிமையெனவும் தெரிவித்துள்ளது.
 
மேலும், தவெக கட்சி பதிவு செய்யும் போது யானை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பு வாதம் கூறியது.
 
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments