Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பராமரிப்பு பணி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்
, வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:37 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
சென்னை அரக்கோணம் பகுதியிலுள்ள கடம்பத்தூர்–திருவாலங்காடு இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
 
இதன் காரணமாக சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.25, 9.10 மணிக்கு அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (வ.எண்:43407/43409), மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும்(43505), செஞ்சிபனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று முதல் 15 நாட்கள் நிற்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: ஒடிசாவில் பரபரப்பு