Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலமைச்சர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: ஒடிசாவில் பரபரப்பு

முதலமைச்சர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: ஒடிசாவில் பரபரப்பு
, வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:08 IST)
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரிலுள்ள தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 


ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் அம்மாநில தலைமைச் செயலகம் உள்ளது. அங்கு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அலுவலகம் அமைந்துள்ளது.
 
இந்நிலையில், அந்த வளாகத்தில் திடீரென தீ விபத்து எற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அதை அணைத்தனர்.
 
இந்த தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் செட்டாப் பாக்ஸ் முதலிய சில பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுடன் டைரக்டர் எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு