Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இருந்து சபரிமலை… 40 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து!

தமிழகத்தில் இருந்து சபரிமலை… 40 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து!
, சனி, 24 டிசம்பர் 2022 (11:43 IST)
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனம் கேரள-தமிழ்நாடு எல்லைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் பலி.


கேரளாவில் உள்ள சபரிமலையில் இருந்து தமிழகத்தின் ஆண்டிபட்டியில் உள்ள தங்கள் சொந்த ஊரான மக்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது குமளிக்கு அருகில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் ஒரு சிறுவனும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கைகளின்படி, வேன் ஒரு ஹேர்பின் திருப்பத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. குமளி - கம்பம் வழித்தடத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பென்ஸ்டாக் குழாய் மீது வாகனம் மோதியது. வேனில் இருந்த 10 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து குமளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக டிசம்பர் மாதம் ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 15 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் கிருஷ்ணா மாவட்டம் பெடானா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சபரிமலைக்கு யாத்திரை சென்று வீடு திரும்பியவர்கள் என்பது கூடுதல் தகவல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருங்கும் பண்டிகைகள்… எகிறும் தங்கம், வெள்ளி விலை!