Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறிவரும் பாடத்திட்டங்கள் – அப்டேட் ஆன அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (15:54 IST)
தமிழக பாட திட்டங்கள் மற்றும் பள்ளிக்கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். நீட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள், மாணவர்களுக்கு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது, மற்ற தனியார் பள்ளிகளை போல உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பாட்டு வசதிகளை அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்துவது போன்ற பல திட்டங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

அதன்படி சென்ற ஆண்டே ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் தற்காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டன. கூடுதலாக இந்த வருடம் 2 முதல் 5 வகுப்புகள், ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரோட்டில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் தமிழகமெங்கும் உள்ள 7000 பள்ளிகளில் 6வது முதல் 8வது வரை ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்நேரத்தில் உள்ளாட்சி துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments