Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (17:42 IST)
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளிக்கப்படும்” என கூறியிருக்கிறார்.

நடப்பாண்டிலிருந்து தமிழ்நாடு கல்வி துறையில் பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “தனியார் பள்ளிகளை விட பாட திட்டத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அனைத்து விதமான மாற்றங்களையும் செய்து வருகிறோம். போட்டி தேர்வுகளுக்கு ஏற்றார்போல பாட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளோம். சென்ற வருட அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒப்பிடும்போது இந்த வருடம் 2 லட்சம் மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். நாளை மறுநாள் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும் மாணவர்களுக்கு பாலியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்த வாரத்தில் ஒரு முறை பாலியல் கல்வி வகுப்புகள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்