Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமருக்கு நன்றி கூறிய எடப்பாடி பழனிசாமி!

பிரதமருக்கு நன்றி கூறிய எடப்பாடி பழனிசாமி!
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:40 IST)
முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏவுமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி கூறி டுவீட் பதிவிட்டுள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை அறிவித்த நிலையில்,தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இது உலகளவில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி கூறி டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும்,குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP)  நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும்  எனது நன்றிகளை மாண்புமிகு  பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னி கலசத்துக்கு பதிலா தேவர் படம் இருந்திருந்தா..? – பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி!