Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ-பாஸ் ரத்து குறித்து முக்கிய முடிவுகளை வெளியிடும் எடப்பாடியார்!

இ-பாஸ் ரத்து குறித்து முக்கிய முடிவுகளை வெளியிடும் எடப்பாடியார்!
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (10:20 IST)
இ-பாஸ் குறித்து முதல்வர் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன. 
 
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.  
 
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இ-பாஸ் முறையை ரத்து செய்வது சவாலானது என தெரிவித்திருந்தார். இதன் பின்னர் இ-பாஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விடைவில் இது குறித்து முதல்வர் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொற்றைவிட டிஸ்சார்ஜ் அதிகம்: இந்தியா கொரோனா நிலவரம்!