Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் சிறை செல்லும் வரை அவர் இருப்பாரா என்ன? யார் அந்த அவர்?

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (17:59 IST)
திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர் அனைவரும் அடுத்த வினாடியே சிறைக்கு செல்வார் என கூறியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார். 

 
எடப்பாடி பழனிச்சாமி கூறியது பின்வருமாறு, திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. ஆனால் நாங்கள் சிறை செல்லும் வரை மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களுடைய முன்னாள் அமைச்சர்களும் வெளியில் இருப்பார்களா? என்று பாருங்கள்.
 
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வழக்குகளை மறைப்பதற்காக அதிமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் ஸ்டாலின். 
 
எனவே ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்களே தவிர, அதிமுக அமைச்சர்கள் பற்றி அவர் தெரிவித்துள்ள யூகங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments